ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு சுவிஸ் உதயம் உதவி


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலையில் உள்ள பின்தங்கிய பாடசாலைக்கு சுவிஸ் உதயம் அமைப்பினால் கணிணி இயந்திரம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.

ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது வவுணதீவு பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிய பாடசாலையாகவுள்ள நிலையில் குறித்த பாடசாலை அதிபர் மற்றும் வலய கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர் திவாகரன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த கணிணி சுவிஸ் உதயம் அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் தலைவர் ரி.சுதர்சன் அவர்களின் இரண்டு பிள்ளைகளினால் இந்த கணிணி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று காலை பாடசாலை அதிபர் து.வித்தியாதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் க.துரைநாயகம்,மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் எஸ்.திவாகரன்,சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளை தலைவர் மு.விமலநாதன்,செயலாளர் ரொமிலா செங்கமலன்,பொருளாளர் அக்கரை பாக்கியன்,உபதலைவர் கன.வரதராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார உதவி செயற்பாடுகள்,கல்வி மேம்பாட்டுக்கான உதவிகள் என பல்வேறு உதவிகளை சுவிஸ் உதயம் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.