மட்டக்களப்பு பெரியகல்லாறை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் திருமதி சுகந்தி சுரேஸ் சர்வதேச விருது ஒன்றை பெற்றுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் ஆசிய விருதொன்றை அழகுக்கலைக்காக பெற்றுள்ளார்.
இந்தியா தமிழ்நாடு திருச்சியில் பீரிஸ் ரெசிடன்சியில் இடம்பெற்ற ஆசிய விருது வழங்கும் நிகழ்வில் இந்த விருதினைப்பெற்றுக்கொண்டுள்ளார்.
பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர் இளம் வயதில் அழகுக்கலை நிபுணராக ஆரம்பித்து கடந்த 28வருடங்களாக இதனை முன்னெடுத்துவருகின்றார்.
சிறந்ததொழில் முயற்சியாளராகவும் கிழக்கு மாகாணத்தில் சிறந்த அழகுக்கலை நிபுணராகவும் பணியாற்றிவருகின்றார்.
ஆசிய நாடுகளில் சிறந்த முயற்சியாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.