மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது குளவி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (08) பதிவாகியுள்ளது.
வவுணதீவு கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் மாணவர்கள் வீதியில் செல்லும் போது குறிஞ்சாமுனை பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் மாணவர்களை தாக்கியதையடுத்து 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடிபிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்
இந்த குளவி கூடுகட்டியுள்ள பனை மரங்களில் இருந்து கூடுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

