சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் க.துரைநாயகத்தின் சொந்த நிதியூடாக இந்த துவிச்சக்கர வண்டிகள் குறித்த மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இதனை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் அதிபர் பொ.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் க.துரைநாயகம்,சம்மாந்துறை வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி நிதர்சினி மகேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக முன்னாள் பிரதி வலய கல்விப்பணிப்பாளரும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவருமான மு.விமலநாதன்,முன்னாள் பிரதிக்கல்வி பணிப்பாளரும் அமைப்பின் உபதலைவருமான கன.வரதராஜன்,சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன்,பொருளாளர் அக்கரைப்பாக்கியன் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வெட்டுப்புள்ளிகளைப்பெற்ற இரு மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான உதவியினை வழங்கிய சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் க.துரைநாயகம் பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
புலம்பெயர் மக்கள் கடுமையான குளிருக்கு மத்தியிலும் கடுமையான உழைப்பின் ஊடாக இங்குள்ள மாணவர்களுக்கான உதவிகளை வழங்கும்போது அந்த உதவிகளை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என முன்னாள் பிரதி வலய கல்விப்பணிப்பாளரும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவருமான மு.விமலநாதன் தெரிவித்தார்.




















