பிரமி கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் நவராத்திரி


நவராத்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

கல்வி நிலையங்களில் இன்று மாலை நவராத்திர தின நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.

மட்டக்களப்பு ஊறணி,பிரமி கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை நவராத்திரி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

கல்லூரியின் தலைவரும் பிரபல ஆசிரியருமான எஸ்.எஸ்.மோகன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது முப்பெரும் தேவிகளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றுதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் ஆன்மீக சொற்;பொழிவுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர் என பெருமளவானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.