கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!!




அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை 15 முதல் வாரத்தின் ஐந்து நாட்களும் வழமையாக இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கிழமையில் மூன்று நாட்கள் பாடசாலைகள் நடைபெற்று வந்த நிலையிலேயே கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்துச் சிரமங்கள் இருப்பின் போக்குவரத்துத் திட்டத்தைத் தயாரிக்குமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மூன்று மாதங்களில் பாடசாலை நேரத்தை பாடங்களை கற்பிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் பாடசாலை நேரத்திற்கு பின்னர் பாடநெறி மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாடசாலைகளில் நடைபெறும் விழாக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.