கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்!!


வத்தளை பிரதேச திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 35 - 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.