பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு- மக்களுக்கு விசேட எச்சரிக்கை!!


பல மாகாணங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வளிமண்டலவியல் நிலையம் அறிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்
மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் நிலையம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா, தெற்கு, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. அதிகபட்சமாக 75 ஆகவும் இருக்கலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.