மட்டக்களப்பில் அசாத்தியமானதை சாத்தியமாக்குவோம் சைக்கிள் ஓட்டப் பவனி!!


தற்போதைய காலகட்டத்தில் நாட்டில் அனைவரும் எதிர்நோக்கி வரும் அசாதரண சூழ்நிலையான எரிபொருள் தட்டுப்பட்டிற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் சைக்கிள் ஓட்ட பவனியொன்றை புனித மிக்கேல் கல்லூரியின் சாரணப் பிரிவினால் நாளை 04.06.2022 திகதி மட்டக்களப்பில் நடாத்த திட்டமிட்டுள்ளனர்.

இச்செயற்பாடானது இந்நாட்டில் தற்ப்போது காணப்படும் அசாதாரண சூழ்நிலையை சாத்தியமாக்கும் வகையிலும் மக்களுக்கு சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பது தொடர்பான விழிப்புணர்வினை எற்படுத்தும் வகையிலும் இடம்பெறவுள்ளது.

அசாத்தியமானதை சாத்தியமாக்குவோம் எனும் தொனிபொருளில் நாளை நடைபெறவுள்ள சைக்கிள் ஓட்ட பவனியில் சாரண மாணவர்களும், அணித்தலைவர்கள் சபை உறுப்பினர்களும், சாரணிய ஆசிரியர்களும் இணைந்து சமூகத்துக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சைக்கிள் ஓட்ட பவனியானது புனித மிக்கேல் கல்லூரி முன்பாக நாளை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக்கோபுரத்தை பிரதான வீதி வழியாக கல்லடிப்பாலத்தை அடைந்து அங்கிருந்து காத்தான்குடி ஊடாக ஆரயம்பதி வரை சென்று அங்கிருந்து மீண்டுமாக புனித மிக்கேல் கல்லூரியை வந்தடையவுள்ளது.