கோட்டா கோ கம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு புத்தகங்கள் அடங்கிய பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
யாழ். பொது நூலகம் காடையர்களால் எரிக்கப்பட்டு கடந்த முதலாம் திகதி 41 வருடங்களை கடந்த நிலையில், இவ்வாறு புத்தகங்கள் அடங்கிய பொதிகள் கோட்டா கோ கமவில் இருந்து யாழ். பொது நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.