கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமைபோன்று நடைபெறும்- கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர்!!


கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் வழமைபோன்று நாளை நடைபெறும் என கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திஸாநாயக்க தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் கிழக்கு மாகாண பாடசாலைகள் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மாத்தி்ம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவுவதாகவும் அத்தகவல் முற்றிலும் தவறானது என்றும் அவர் தெரிவித்ததுள்ளார்.