தேசிய இரசாயனவியல் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சாதனை!!


Institute of Chemistry Ceylon எனும் அரச இரசாயனவியல் கல்லூரியினால் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட Chemistry Quiz இல் தேசியரீதியில் 06 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன.

அதில் புள்ளிகளின் அடிப்படையில் முதலாவதாக மட்டக்களப்பு புனித மிக்கேல கல்லூரியும் சிசிலியா கல்லூரியும் , வின்சன்ட் கல்லூரியென 03 பாடசாலைகள் இடம்பிடித்து சாதனை படைத்திருந்தது.

பின்னர் கொழும்பு இராஜகிரியவில் நடைபெற்ற இறுதிநிகழ்வில் முதலாவதாக கொழும்பு பரியோவான் கல்லூரியும் இரண்டாவதாக மட்/ புனித சிசிலியா, மூன்றாவதாக மட்/ புனித மிக்கேல் கல்லூரியும் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் தேசிய ரீதியில் ஆறு பாடசாலைகளுக்குள் மூன்று பாடசாலைகள் இடம்பிடித்ததும் இரண்டாவது , மூன்றாவது இடங்களை கையகப்படுத்தியதும் மட்டக்களப்பு மாவட்ட கல்விச்சமூகத்திற்கு கிடைத்த ஒரு பாரிய வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது.