(ரஞ்சன்)
மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு கிராமத்தில் விவசாய காணிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று கூழாவடி நெல்லிக் காடு கிராமத்தைச் சேர்ந்த அழகிப்போடி- தங்கராசா வயது 65 , பிள்ளைகள் நான்கு ஆகிய குடும்பஸ்தரெ இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாதர்
நேற்று(12) மாலை வீட்டிலிருந்து வெளியில் போன குடும்பஸ்தர் வீட்டுக்கு வராத காரணத்தினால் உறவினர்களாள் இரவு தேடுதல் மேற்கொண்ட போதும் வீட்டுக்கு வராத காரணத்தினால் இன்று காலை (13) அதிகாலை வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அவருடைய விவசாய காணியில் விவசாயத்துக்கு பாவிக்கும் கிருமி நாசினி போத்தல் அருகாமையில் கிடந்தவாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
உறவினர்களால் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிசாரின் விசாரணை முடிவுற்றதுவும் சடலத்தினை போரதீவுப்பற்று பற்று பிரதேசசபை வாகன உதவியுடன் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.


.jpeg)

