மூதூர் பிரதேச சுயாதீன ஊடகவியலாளர் மொஹமட் புஹாரி நேற்று (21) மாலை மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்புவதற்கான வரிசையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து செய்தி சேகரித்த வேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஆறு பேர் கொண்ட குழுவினால் அவரது கைபேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மெட்களுடன் பறித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் ஊடகவியலாளரிடம் கைத்தொலைபேசி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
