திருகோணமலை சல்லி-சம்பல்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கப்பல் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை குழு ஒன்று நிலாவெளி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

