வவுணதீவில் அமைந்துள்ள கோப் விற்பனை நிலையம் தீயில் எரிந்து நாசம் -காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதெச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வவுணதீவில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட கோப் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக அங்கிருந்த பொருட்கள் அனைத்து எரிந்துசாம்பராகியுள்ளது.

நேற்று மாலை குறித்த விற்பனை நிலையம் மூடப்பட்டதன் பின்னர் தீபரவல் ஏற்பட்டதை தொடர்ந்து வவுணதீவு பொலிஸாரும் மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளனர்.

இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் வர்த்தக நிலையத்திலிருந்த இலத்திரனியல் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தீ பரவல் சம்பவமானது மின் ஒழுக்கா அல்லது வேறு காரணங்கள் ஏதுவும் உள்ளதா என்பது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீ காரணமாக குறித்த வர்த்தக நிலையத்திற்கு சுமார் 20 இலட்சம் ரூபாவுக்கு மேல் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் மக்களுக்கு மிகவும் விலை குறைந்த நிலையிலேயே பொருட்களை வழங்கிவந்ததாக ஈச்சந்தீவு-கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நாகலிங்கம் உருத்திரமூர்த்தி தெரிவித்தார்.