சுற்றாடல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் புதன்கிழமை (27.04.2022) ஜப்பானியத் தூதுவர் மிஷ{கோஷி ஹிடியாக்கியை (ஆணைரமழளாi ர்னைநயமi) அமைச்சில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து இச்சந்திப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. மேலும், புதுப்பிக்கத்தக்க வலுவை, சுற்றாடல்துறையில் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகள் குறித்தும் அமைச்சர் அளவளாவினார்.
இச்சந்திப்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜேசிங்க உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.