திருகோணமலையில் தொழிற்சங்கங்கள் பல இணைந்து அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!


திருகோணமலை பொது வாகன தரிப்பிடத்திற்கு முன்னால் தொழிற்சங்கங்கள் பல இணைந்து அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி ஊழியர்கள் சங்கம், தபால் ஊழியர் சங்கம், தொலைதொடர்பு ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், துறைமுக அதிகார சபை ஊழியர் சங்கம், தம்பலகாமம் சிவில் சங்கம் போன்ற பல அமைப்புகள் பங்கு கொண்டன.

ஆர்ப்பாட்டம் காரணமாக கடற்படைதளவீதி காளி கோயில் சந்தியில் இருந்தும் மணிக்கூண்டு கோபுரத்தில் இருந்தும் பொலிசாரால் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.