நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (28.04.2022) முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக மட்டக்களப்பில் வங்கிகள் தபாலகங்கள் பிரதேச செயலகங்கள் செயலிழந்து காணப்படுகின்றன.
எனினும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்களும் தனியார் பஸ்களும் வழமை போன்று பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.