மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தினையும் மீறி இன்று மாலை எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டமாக நின்றதை காணமுடிந்தது.
முட்டக்களப்பு நகரில் பார்வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இன்று மாலை நேரத்தில் பெருமளவானோர் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பியதை காணமுடிந்தது.
நேற்று மாலை தொடக்கம் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றினை இறுக்கமான நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
எரிபொருள் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் மக்களை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.