மட்டக்களப்பு மாவட்டம் ஊரடங்கு காரணமாக முற்றாக முடங்கியுள்ளதுடன் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நூட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக அரசாங்கத்தினால் நேற்று மாலை தொடக்கம் நாளை காலை வரையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளதுடன் அவசர சேவைகள் வழமைபோன்று நடைபெறுவதுடன் அத்தியாவசிய கடமைக்கு செல்வோர் அனுமதிக்கப்படுகின்றனர்.
முட்டக்களப்பு நகர் உட்பட புறநகர் பகுதிகளிலும் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ஆத்துடன் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களைவ வீட்டில் இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் பொலிஸாரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
முட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்துகள் முற்றாக முடங்கியுள்ளதுடன் ஒரு சில அரச போக்குவரத்து சேவைகள் மட்டும் அத்தியாவசிய சேவையினை கருத்தில்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.