அவன்ட் கார்ட் தலைவர் நாட்டிலிருந்து தப்பியோட்டம்!!


அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளதுடன் விமானநிலையத்தின் கணணி மற்றும் பாதுகாப்பு கமராக்களின் செயற்பாடுகளும் திட்டமிடப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவன்ட் கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளனர்.

கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து அவர்கள் மாலைதீவிற்கு சென்றுள்ளனர்.

நேற்று காலை கொழும்பிலிருந்து புறப்பட்ட யுஎல்- 102 ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் மாலைதீவு சென்றுள்ளனர்.

அவர்கள் நாட்டிலிருந்து தப்பிச்செல்வதற்கு உதவும் வகையில் விமானநிலையத்தின் கணணி அமைப்பு முறையும், பாதுகாப்பு கமராக்களும் திட்டமிடப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டன என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.