திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் எஸ்.பார்த்தீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2015ம் ஆண்டு திறந்த போட்டிப்பரீட்சை மூலம் இலங்கை நிருவாக சேவைக்கு இணைக்கப்பட்ட இவர் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச்செயலாளராக கடமையாற்றிவந்தவேளை இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இவர் இந்நியமனத்திற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண கூட்டுறவு பிரதி ஆணையாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை தம் கடமைகளை இவர் சுப நேரத்தில் பொறுப்பேற்றார்.