நடைபாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் எடுத்தல் காணொளி பதிவு செய்தலுக்கான கட்டண விபரம் வெளியாகியது...!!


கொழும்பு துறைமுக நகரில் பொதுமக்களின் பாவனைக்காக அண்மையில் திறக்கப்பட்ட மரீனா நடைபாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி பதிவு செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களின் விபரத்தை கொழும்பு போர்ட் சிட்டி (தனியார்) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2 பேர் தொடக்கம் 5 பேர் பங்கேற்புடன் குறித்த சூழல் பின்னணியை பயன்படுத்தி 3 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக புகைப்படம் எடுப்பதற்கு 30 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படும்.

மேலும் 6 பேர் தொடக்கம் 10 பேர் பங்கேற்புடன் 1-3 வரையான மணித்தியாலங்களுக்குள் படப்பிடிப்பில் ஈடுப்பட்டால் 50 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படும்.

அத்துடன் 10இற்கும் மேற்பட்டவர்கள் மூன்று மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் படப்பிடிப்பில் ஈடுப்பட்டால் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுப்படும்.

10 இற்கும் குறைவான எண்ணிக்கையிலானோர் ஒன்று முதல் 3 மணித்தியாலங்களுக்குள் படப்பிடிப்பில் ஈடுப்படும் போது ஒரு இலட்சம் ரூபா கட்டணம் அறவிடப்படும்;.

அத்துடன் 10 பேருக்கு மேல் வர்த்தக நோக்கில் படப்பிடிப்பில் ஈடுப்பட்டால் மூன்று மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்கான கட்டணத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டண பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.