மட்டக்களப்பு- பன்சேனையில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு...!!


மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் உதயகுமார் வயது (46) என்பவர் வியாழக்கிழமை (02.12.2021) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தனது வதிவிட த்திலிருந்து பன்சேனை பிரதேசத்திற்கு தனது தாயின் வீட்டுக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் வீட்டுத் தோட்டம் செய்கை பண்ணப்படும் வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தூங்கிய நிலையில் காணப்பட்ட நபரை ஆடுகள் மேச்சலுக்கு கொண்டு சென்ற நபர் ஒருவர் கண்டதையடுத்து மரணமானவரின் வீட்டாருக்கு சம்பவத்தை தெரிவித்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்ளப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட் படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.