லிட்ரோ கேஸ் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை...!!


வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டர்களுக்கு சவர்க்கார நீர் போன்ற முறைகளைப் பயன்படுத்தி சோதனை செய்ய வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகிறது.

வெடிப்புகள் பதிவாகிய இடங்களுக்குச் சென்ற லிட்ரோ கேஸ் நிறுவன அதிகாரிகள் சோதனை இட்டுள்ளனர்.

இதன் போது சிலிண்டரின் வால்வுக்குள் சோப்பு தண்ணீரை வைத்ததன் விளைவாக ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக இரண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக லிற்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே சவர்க்கார நீர் போன்ற முறைகளைப் பயன்படுத்தி சமையல் எரிவாயு சிலிண்டர்களை பரிசோதனை செய்ய வேண்டாம் என லிற்ரோ காஸ் நிறுவனமானது எச்சரிக்கை விடுத்துள்ளது.