கொக்கட்டிச்சோலை பகுதியில் 41 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டவர் முருகப்பன் லோகிதன் என முதற்க்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கற்சேனையில் உள்ள ஆலய விடுதியில் தங்கியிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த பகுதிக்கு சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி த.தவக்குமார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.