நாட்டில் அரிசிக்கான அதிக பட்ச சில்லறை விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ளது.
அதனடிப்படையில்
1. நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாவாகவும்,
2. சம்பா அரிசி ஒரு கிலோ 140 ரூபாவாகவும்
3. கீரி சம்பா ஒரு கிலோ 165 ரூபா ரூபாவாகவும் விலை குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசிக்கான கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயித்து கடந்த 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய அமைச்சரவை நேற்று தீர்மானித்திருந்தது.
ஒரு கிலோ நாட்டரிசி விலையை 98 ரூபாவாகவும், சம்பா அரிசியின் விலையை 103 ரூபாவாகவும், கீரி சம்பாவின் விலையை 125 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலைகளாக நிர்ணயித்து குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.