பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து பேரணியானது மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் வரை சென்று அங்கிருந்து மீண்டும் காந்தி பூங்கா வரையில் பேரணி நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு ஆசிரியர்,அதிபர் தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
அதிபர், ஆசிரியர்களின் 24 வருட சம்பள முரண்பாட்டை நீக்கு,
அதிபர், ஆசிரியர்களின் சேவையை "அகப்படுத்தப்பட்ட சேவை"யாக அங்கீகரி!அதிபர், அசிரியர், மாணவர், பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்து! கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை அமுல்படுத்தாதே!அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்து!
இலவசக் கல்வியை இராணுவ மயமாக்காதே! அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்க எமது சேவையை கௌரவப்படுத்து!
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் பெருமளவான ஆசிரியர்கள்,அதிபர்கள் கலந்துகொண்டதுடன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் பெருமளவான ஆசிரியர்கள்,அதிபர்கள் கலந்துகொண்டதுடன் தமது போராட்டம் நிறைவுபெறும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.