மட்டக்களப்பு வர்த்தக சங்கம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைகாலகமாக தீவிரம்பெற்றுவரும் கொரனா தொற்று பரவல் காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை நாளை காலை முதல் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கு அனைத்து வர்த்தகர்களும் தங்களது ஆதரவினை வழங்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று மட்டக்களப்பு வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஊடகசந்திப்பொன்றினை நடாத்தினார்கள்.

தற்போதைய மாவட்டத்தின் சூழ்நிலையினை கருத்தில்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் 29ஆம் திகதி வரையில் வர்த்தக நிலையங்களை பூட்டுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் மு.செல்வராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலையினை கருத்தில்கொண்டு அனைவத்து வர்த்தகர்களும் தங்களது ஆதரவினை வழங்கவேண்டும் எனவும் அத்தியாவசிய நடவடிக்கைகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் தமது சேவையினை மட்டுப்படுத்திய வகையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.

வர்த்தகர்கள் எடுத்துள்ள இந்த முடிவுகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்களது ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையிலான தொடர்புகள் மூலம் கொரனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.இதன்காரணமாகவே சமூகத்தின் நலன்கருதியும் வர்த்தகர்களின் நலன்கருதியும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மக்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு வர்த்தகர்களுக்கும் உள்ளது.அதனடிப்படையில் அனைத்து வர்த்தகர்களும் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி பொதுமக்களை பாதுகாக்கமுன்வரவேண்டும்.கொரனா தொற்றிலிருந்து மட்டக்களப்பு மக்களை பாதுகாக்கவேண்டியது எங்களது அனைவரது கடமையாகும்.

சில வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.பலசரக்கு கடை,வேக்கரிகள் விற்பதற்கு மட்டுமே திறக்கப்படும்,ஹோட்ல்களும் சாப்பாடு எடுத்துச்செல்லல் மட்டும் முன்னெடுக்கமுடியும்,எரிபொருள் நிரப்பு நிலையங்கள்,பழக்கடைகள்,மருந்துவிற்பனை நிலையங்கள் திறப்பதற்கான அனுமதியுண்டு;. அதேபோன்று உங்கள் வீடுகளில் இருந்து ஒருவரை மட்டும் வெளியில் அனுப்பி அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு மட்டக்களப்பு வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.