கரடியனாறு பங்குடாவெளிச்சந்தியில்இன்று அதிகாலை 3 மணியளவில் சட்டவிரோத மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற போது பொலிஸார் குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்த முயற்சித்தபோதும் உழவு இயந்திரம் பொலிஸாரின் சமிக்கையை மீறி சென்ற நிலையில் பொலிஸார் அதனை துரத்திச் சென்ற நிலையில் உழவு இயந்திரம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய எஸ்.துசாந்தன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.