மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரனா தொற்றாளர்கள் -நேற்று 47பேர் அடையாளம்


மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் நேற்று 47கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் நேற்று பல்வேறு பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

கல்லடி,கொக்குவில்,பனிச்சையடி,சத்துருக்கொண்டான் ஆகிய பகுதிகளில் 199அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 47பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படும்போதே கொவிட் தொற்றின் பரவும் வேகத்தினை கட்;டுப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.