போரதீவுப்பற்றில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்


(ரஞ்சன்)

சினோபாம் கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் இன்றைய தினம் சினோபாம் கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் அண்மைக்காலமாக கொரனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இன்றைய தினம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் வெல்லாவெளி மகா வித்தியாலயம் மற்றும் திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன.

வெல்லாவெளி மகா வித்தியாலயத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இன்றைய தினம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சிமன்ற ஊழியர்கள்,பொலிஸார் ஆகியோருக்கு தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.