மட்டக்களப்பில் தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் க. மோகன் பயங்கரவத தடைச் சட்டத்தில் கைது

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் வழங்கும் நடவடிக்கைகளை முகநூல் மூலம் முன்னெடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ்  தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் க. மோகனை ஞாயிற்றுக்கிழமை (02) இரவு மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள அவரது வீட்டில்வைத்து அவரை  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 முகநூல் வழியாக விடுதலைப்புலிகள் மீண்டும் புதிப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டின் பேரில் 3 மாதகால பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியினை பெற்று அவரை இன்று இரவு  அவரது வீட்டில் வைத்து  கைது செய்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.