வெல்லாவெளியில் ஆயுதங்களில் தேடும் நடவடிக்கை


(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மாகாவித்தியாலய வளாகத்தில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசேடஅதிரடிப்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் பணிகளை முன்னெடுத்தனர்.

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தின் அனுமதியுடன்  பாடசாலை வளாகத்தினுள் கனரக ஜேசிபி வாகனம் உதவியுடன் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.

வெல்லாவெளி  கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய வளாகத்தினுள்  வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி  ஆனந்த சிறியின்  தலைமையில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரும் இனைந்து இந்த தேடுதல் வேட்டையினை மேற்கொண்டனர்.  

ஜேசீபி வாகன மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதலின்போது எந்தவிதமான ஆயுதங்களும் மீட்கப்படாத நிலையில் தற்காலிகமாக தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.