மட்டக்களப்பில் ஹர்த்தால் அனுஸ்டிப்பு


யாழ் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிராக வடகிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் இருந்தும் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் இன்று கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிக்க்படுகின்றது.

மட்டக்களப்பு கொரனா அச்சுறுத்தல் காரணமாக அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடுமாறு நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் இன்று அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

போக்குவரத்துகள் நடைபெறுகின்றபோதிலும் பொதுமக்கள் குறைவான நிலையிலேயே நடைபெறுவதை காணமுடிகின்றது.

பாடசாலைகள் நடைபெறுகின்றபோதிலும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவான நிலையிலேயே காணமுடிகின்றது.

இன்றைய தினம் கொரனா அச்சுறுத்தலால் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றபோதிலும் திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.