தாழங்குடாவில் விபத்து -இளைஞர் பலி


மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்களிலும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் செங்கலடி பகுதியை சேர்ந்த 30வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிந்துள்ளார்.

இது தொடர்பில் காரி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.