கொரனா அச்சுறுத்தல் நீங்கி மக்கள் நிம்மதியாக வாழ ஆலயங்களில் பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாலை ம்ருத்யுஞ்ஜய யாகம் நடாத்தப்பட்டது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களினால் இந்த மகா ம்ருத்யுஞ்ஜய யாகம் நடாத்தப்பட்டது.
கொரனா தொற்றில் இருந்து இந்த நாட்டில் இருந்து ஒழிந்துசெல்லவும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் இங்கு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.
பல்வேறு அற்புத மூலிகைகள் கொண்டு நடாத்தப்பட்ட இந்த மகா யாகத்தில் ஆலய நிர்வாகத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.
சிவனை நோக்கி நடாத்தப்பட்ட இந்த மகா யாகத்தின் மூலம் இந்த நாட்டு மக்கள் நோய்நொடியின்றி வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது.