மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் ஏறாவூரில் ஒருவரும் கோறளைப்பற்று மத்தியில் ஆறு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மாவட்டத்தின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் கிழக்கு மாகாணத்தில் 9674பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 5091பேர் பீசிஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.