மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச சபை வரவு செலவுத்திட்டத்தின்போது அதற்கு எதிராக வாக்களித்த இலங்கை தமிழரசுகட்சி முனைத்தீவு வட்டார கிளை உறுப்பினர் சுகிகரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைதமிழரசு கட்சியின் மூத்த துணைத்தலைவரும் தப்போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கு இலங்கை தமிழரசுகட்சியின் சிறப்பு பொறுப்பாளராக செயலாற்றும் பொ.செல்வராசா, இலங்கைதமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்துக்கூறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா,
வெல்லாவெளி பிரதேச சபை வரவு செலவுத்திட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தை சேர்ந்த ரஜனி தவிசாளராக கடந்த 2018 ம் ஆண்டில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு அவருக்கு எதிராக எமது இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த முனைத்தீவு வட்டார உறுப்பினரான சுகிகரன் என்பவர் தமிழ்மக்கள் விடுதலை புலிகள்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்த்து வாக்களிப்பதற்கு முயற்சிசெய்வதாக தாம் அறிந்து இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்கவேண்டாம் என நான் பலதடை கூறியபோதும் அதனை பொருட்படுத்தாமலும் ஏற்றுக்கொள்ளாமலும் எனது வேண்டுகோளை உதாசீனம் செய்து இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவர் எதிர்த்து வாக்களித்தருந்தமை தமிழ்தேசியகூட்டமைப்பு பங்காளிக்கட்சிகளுக்கிடையே ஒற்றுமையின்மையைதோற்றுவித்துள்ளது.
மட்டக்களப்புமாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மாநகரசபை ஏனைய பிரதேச சபைகளின் வரவு செலவு திட்டத்தின்வாக்கெடுப்புகளில் பங்காளிக்கட்சிகளின் ஆதரவுதொடர்ந்தும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தேவை என்பதை எல்லோருமே அறிந்த விடயமாகும்.இதனை உணராமல் சிறுபிள்ளைத்தனமாக முனைத்தீவு வட்டார உறுப்பினர் நடந்து கொண்டுள்ளார்.
தன்னிச்சையாக வெல்லாவெளி பிரதேச சபை வரவு செலவத்திட்டத்திற்கு எதிராக தமிழரசு கட்சி வட்டார உறுப்பினர் எதிர்த்து வாக்களித்த விடயத்திற்கு தமிழரசு கட்சி தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராசா அவர்களின் கவனத்திற்கு இதனை தெரியப்படுத்தியுள்ளேன்.
இதற்கான நடவடிக்கையை எடுக்கும் பொறுப்புஎன்னிடம் இல்லை என்பதால் அவரின் மேலான கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளேன் என பொ.செல்வராசா தெரிவித்தார்.

