மட்டக்களப்பில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு – வெள்ளாவெளி பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.என். அப்துல்லா நேற்று இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.