மட்டக்களப்பு மாவட்டத்தில் 40வீதம் வாக்குப்பதிவு – வன்முறைகள் இல்லை

நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளில் நண்பகல் 12மணி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 40வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதுவித வன்முறைகளும் இன்றி சுமுகமாக முறையில் வாக்களிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றுவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 345 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இன்றைய தினம் எந்த வன்முறைகளும் பதிவாகவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.