ஆரையம்பதியில் எனது வாக்கு வீட்டு சின்னத்துக்கே ஒலித்தது முதியோர் குரல்!

மட்டக்களப்பு ஆரையம்பதியில் தமிழ்தேசியகூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் ஐந்தாம் கட்டமாக இன்றைய தினம் (08)முன்னெடுப்பு.

 எதிர்வரும் ஆவணி ஐந்தாம் திகதி இடம்பெறவிருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஆரையம்பதியில் தமிழ்தேசியகூட்டமைப்பினார் பொதுவான துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.

 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எமது இனப்பிரச்சினைகள் நில அபகரிப்பு துணிச்சலாக தமிழ்த்தேசியம் சார்ந்துள்ளது. எமது தமிழ்தேசிய தலைவருக்கு அடுத்த கட்டமாக இரா.சம்பந்தன் அவர்கள் உள்ளார். ஆகவே எங்களுடைய தெரிவு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வீட்டு சின்னத்துக்கே ஆரையம்பதியில் உள்ள ஒரு முதியோர் தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்தினர்.

 தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு பிரச்சார அணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டுநகர் முதல்வர் சரவணபவான், முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் நடராசா,பிரதேச சபை உறுப்பினர் நகுலேஸ்,வடகிழக்கு வாலிபமுன்னணி தலைவர் சேயோன்,வாலிபமுன்னணி உறுப்பிர்களும் தேர்தல் பிரச்சார பணியை மேற்கொண்டனர்.