வரலாற்றுசிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவம் ஆரம்பம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தீர்த்தம், தலம், விருட்சம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்டு பன்னெடுங்காலமாக கிழக்கிலங்கையில் இந்த மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்கிருகின்றது.

இராமாயண காலத்தில் இராமன் மற்றும் இராவணனால் வணங்கப்பட்ட ஆலயமாகவும் அனுமாரின் தீப்பிடித்த வாலினை அணைத்த ஆலயாகவும் இந்த ஆலயத்தின் வரலாறுகள் பறைசாற்றி நிற்கின்றன.

இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்ற வேத,தாள,அரோகரா கோசங்கள் முழங்க கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களினால் உற்சவம் சிறப்பாக நடாத்தப்பட்டது.

தற்போதைய கொரனா அச்சுறுத்தல் சூழ்நிலையிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி ஆலய கொடியேற்ற உற்சவத்தில் கலந்துகொண்டனர்.

10தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 20ஆம் திகதி ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.