செங்கலடி பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரச்சார பணி!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பகுதியில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஏழாம் கட்டமாக தேர்தல் பிரசார பணி முன்னெடுப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் (14) இன்று மேற்கொள்ளப்பட்டது.

 எதிர்வரும் ஆவணி ஐந்தாம் திகதி இடம்பெறவிருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களிடம்  கையளிப்பு.

இப்பிரச்சார பணியில் மட்டு மாநகர சபை முதல்வர் சரவணபவன்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா(நடா),மகளிர் அணி உறுப்பினர் க.கலைவாணி வடகிழக்கு வாலிபமுன்னணியின் தலைவர் சேயோன் ஆகியோரால்  பிரச்சார பணி முன்னெடுக்கப்பட்டது.