இரு மாவட்டங்களில் பசிபோக்கிய அடைக்கலம் பவுன்டேசன்.


கல்லாறு அடைக்கலம்  தொண்டு அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான துறைநீலாவணை கிராமம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான துரைவந்திய மேடு கிராமங்களில்  வதியும்  தேவையுடைய (20) குடும்பங்களுக்கு  உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் உதவி திட்டம்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி செயலாளர் கணேசமூர்த்தி சசீந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .