வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் முன்னைநாள் அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய திருமதி ஹரணியா சுபாகரன் அவர்கள் இடமாற்றம் பெற்று செல்கின்றார். அவரது பிரியாவிடை நிகழ்வு இன்று(28) பாடசாலையில் நடைபெற்றது.

திருமதி சுபாகரன் அவர்கள் வின்சட் மகளிர் தேசிய பாடசாலையின் 19 ஆவது அதிபர் ஆவார், கடந்த 2018 ஆம் ஆண்டு அதிபர் பொறுப்பேற்ற அவர் 2020 பெப்ரவரி மாதம் வரையான இரண்டு வருட காலப்பகுதியில் அதிபர் சேவையினை வகித்துள்ளார்.

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான சிறப்பு பட்டதாரியான திருமதி சுபாகரன் இலங்கை கல்வி நிருவாக சேவையில் 2017 இல் தேர்வாகி உள்வாங்கப்பட்டார். மட்/வின்சன்ட் தேசிய பாடசாலையின் பழைய மாணவியான இவர் பட்டபின் கல்வி டிப்ளோமாவினை பூர்த்தி செய்துள்ளதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டம் கற்றுக்கொண்டிருக்கின்றார்.

பிரியாவிடை நிகழ்வில் தற்போதைய அதிபர் தவத்திருமகள் உதயகுமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் இடமாற்றம் பெற்று செல்லும் திருமதி சுபாகரன் அவர்களுக்கு மாணவர்கள், அதிபர் ஆசிரியர்கள் வாழ்த்துச் சொல்லி கௌரவித்தனர். திருமதி ஹரணிகா சுபாகரன் அவர்கள் வலயக்கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.