மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

அமரர் அலையப்போடி ஞாபகார்த்தமாக வருடாந்தம் அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தினால் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டுவருகின்றது.

இதன் கீழ் கடந்த ஆண்டு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மகராஜ் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி;.புஸ்பலிங்கம்,தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மாகாண பணிப்பாளர் ஏ.ரவீந்திரன்,சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான திருமதி மங்களேஸ்வரி சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சுமார் 90மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.