மட்டக்களப்பில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வடகிழக்கில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டின் விடுதலைக்காக உயிர்நீர்த்தவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பசுமையான நாட்டினை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் மர நடுகை நிகழ்வும் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்காவில் இந்த மரநடுகை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.