போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வு



 (எஸ்.நவா)

72 தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நாடு பூராகவும் அரசாங்க அலுவலகங்களில் சிறப்பாக இடம்பெற்ராலும் வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திலும் உணர்வு பூர்வமாக சுதந்திர நிகழ்வுகள் இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கணக்காளர் எஸ்.நாகேஸ்வரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் நிருவாக உத்தியோகத்தர் ரீ.உமாபதி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஆர்.தனேந்திரராசா மேலதிக மாவட்ட பதிவாளர் எஸ்.தர்சன்  சமூகசேவை உத்தியோகத்தர்  ஏ.சபேசன் மற்றும் பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தேசிய கொடியேற்றல் தேசிய கீதம் இசைத்தல் நிகழ்வுகளுடன் ஆரம்பமான நிகழ்வில் மௌன இறைவணக்கம் பிரதேச செயலாளரின் சுதந்தரதின உரை இறுதியாக சுதந்திர தினத்தினை முன்னிட்டு மரநடுகை வேலைத்திட்டமும் அலுவலக வளாகத்தில் சிரமதான பணிகளும் இடம்பெற்றது.குறிப்பிடத்தக்கது